அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 47 மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப் பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப் பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே பொருள் : அபெஜோதி தனக்கு சுத்த பிரணவ ஞான தேகம் அளித்து – திருவடி கிரீடம் சூட்டி…