திருமந்திரம் – திருநீற்று பெருமை – அருட்கலை பெருமை கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே கருத்து : இறைவன் அணிந்திருக்கும் திரு நீற்றை அணிந்தால் ( அதாவது நீறாகிய அருட்கலையை தன் உடலில் வீசச் செய்தால் ) வினைகளெல்லாம் தங்காமல் தீரும் – ஒழியும் , அவர்கள் சிவ கதி அடைவார்கள் – அவர்கள் அழகிய திருவடிகள் பதம் சேர்வார்கள்…