அழுகணி சித்தர் பாடல் – வாலை பெருமை முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா கோலமிட்டுப் பாரேனோ. விளக்கம் : மூன்று நாடி கூடும் வாசலிலே – 5 இந்திரியங்கள் கூட்டி , அதை அடக்கி , எண்ணமிலா நிலையிலே / 36 தத்துவமும் அகன்ற நிலையிலே – பஞ்ச இந்திரிய ஒளியினால் உனை காணேனோ வாலை அம்மையே ?? வெங்கடேஷ்…